வஞ்சித் தலைநகராம் கருவூரின் மேற்கே கொடுமுடி செல்லும் சாலையில் 5 கல் தொலைவில் அமைந்துள்ளது எங்கள் குலதெய்வத்திருக்கோவிலான ஆத்தூர் ஸ்ரீ சோளியம்மன் திருகோவில். கோவில் எந்த நூற்றாண்டில் தோற்றுவிக்கப்பட்டது என்பதை சரித்திர ஆராய்ச்சியாளர்களே சொல்ல இயலும். ஆயினும் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஸ்ரீ சோளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து அருள்பாலிக்கும் நிலையிலும் ஸ்ரீ முத்துசாமி கிழக்கு நோக்கி கத்தி, கவை முதலிய ஆயுதங்களுடன் துஷ்ட சம்ஹாரியாகவும் சாம்பவன், பட்டவன், வாக்கார அப்பிச்சி ஆகிய பரிவார மூர்த்திகள் புடை சூழவும் இலுப்பை மரத்தை தலவிருட்சமாகவும் கொண்டு இருந்து வருகிறது.
சித்திரைக்கனி
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நமது குல தெய்வத்திற்கு காய்கள், கனிகளால் அலங்காரம் செய்து வழிபடுகிறோம் மாவிலை தோரங்ககளும் வாழை மரங்கள் தென்னங்குலை தென்னம்பாளை
இவைகளால் கோவில் அலங்காரம் செய்து நமது குலதெய்வம் ஸ்ரீ சோழியம்மன் வழிபடுகிறோம்….More…
சித்ரா பௌர்ணமி
ஒவ்வெரு வருடம் சித்திரை மாதத்தில் வரும் சித்ரா பௌர்ணமியன்று நமது குல தெயவம் சோழியம்மனை சிறப்பாக அபிஷேகம் செய்தும் 1008 தீபங்கள் ஏற்றியும் வழிபாடு செய்து ஆனந்தமாக பௌர்ணமி அன்னம் உண்டு மகிழ்வோடு சோழியம்மன், முத்துசாமி அருள் பெறுகிறோம்….More…
திருப்பணி கூட்டம்
வருட வருட ஆடி மாத வெள்ளிக்கிழ மைகளில் நமது குடிபடுக்கார்கள், உறவின் முறையோரகள், பக்தர்கள் அனைவரும் சேர்ந்து நமது குலதெவத்கு 1008 பால் குடம் எடுத்து கருவை மாநகரில் இருந்து மேலதாள்ங்களுடன் ஊர் வலமாக சென்று அபிஷேகம் செய்து வழிபட்டு வருகிறோம்…More…